Thursday, January 27, 2011

செக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி-போலீஸ் உதவியை நாடிய கணவர்

செக்ஸ் உறவு போதாது, போதாது என்று என்று கூறி அடிக்கடி என்னை எனது மனைவி செக்ஸ் உறவுக்கு அழைத்து பெரும் தொல்லை கொடுக்கிறார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒரு கணவர் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இது நடந்துள்ளது ஜெர்மனியில்.

அந்த அப்பாவிக் கணவர் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை நாடினார். அவர்களிடம், எனது மனைவி என்னை தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறி அனத்துகிறார். நான் எவ்வளவுதான் உறவு வைத்துக் கொண்டாலும் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார். 

எங்களுக்கு கல்யாணமாகி 18 வருடங்களாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக எனது மனைவியின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் நான் படுக்கை அறைக்குள் போக முடியவில்லை. உள்ளே போனாலே செக்ஸ் உறவுக்கு அழைக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால் நான் வீட்டு சோபாவில்தான் தினசரி தூங்க நேரிடுகிறது.

அப்படியும் கூட அவர் விடுவதாக இல்லை. எங்கு இருந்தால் என்ன, என்னை திருப்திப்படுத்து என்று கூறி தொல்லை செய்கிறார். கோப்படுகிறார். என்னை எனது மனைவியின் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் சற்று அமைதி அடைந்த அவர், தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கூறி விட்டுச் சென்றார்.

விவாகரத்து நடவடிக்கைகள் முடியும் வரை அவரை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரது மனைவியிடம் அறிவுரை கூற போலீஸார் தீர்மானித்துள்ளனராம்.


Wednesday, January 19, 2011

விக்கிலீக்ஸ் வெளியிடப் போகும் சுவிஸ் வங்கிக் கணக்குப் பட்டியலில் தமிழர்கள்

விக்கிலீக்ஸ் வசம் கிடைத்துள்ள சுவிஸ் வங்கிகளில் பெரும் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் குறித்த பட்டியலில் தமிழர்கள்  பெயரும் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஜூலியஸ் பேயர் என்ற சுவிஸ் வங்கியின் முன்னாள் தலைவரான ருடால்ப் எல்மர், 2 சிடிக்களில் பேயர் வங்கியில் கணக்கு வைத்துள்ள பல்வேறு முக்கியஸ்தர்களின் விவரங்களை விக்கிலீக்ஸிடம் அளித்துள்ளார். அதில்தான் தமிழர்கள்  பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 

ஹெட்லைன்ஸ் டுடே டிவி இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. எல்மருடன் தொடர்பு கொண்டு அவரிடமிருந்து இந்த விவரங்களைப் பெற்றதாக ஹெட்லைன்ஸ், கூறியுள்ளது.

இந்த பேட்டியின்போது சுவிஸ் வங்கிகளில் எப்படிப் பணத்தைப் போடுகிறார்கள், வங்கிக் கணக்குகள் எப்படி தொடங்கப்படுகின்றன. என்ன மாதிரியான முறையில் பணத்தை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்பது குறித்து விரிவாக விளக்கியுள்ளார் எல்மர்.

எல்மர் கொடுத்துள்ள பட்டியலில் மொத்தம் 2000 கணக்குகள் குறித்த விவரங்கள் உள்ளன. அதில், அன்னபூர்ணா என்ற பெயரில் மூன்று நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று கணக்குகளும், நியூயார்க்கில் உள்ள பேயர் வங்கிக் கிளையில் தொடங்கப்பட்டுள்ளன.

அவை - அன்னபூர்ணா கன்வெர்டிபிள் லிமிட்டெட், அன்னபூர்ணா லீவரேஜ், அன்னபூர்ணா கன்வெர்டிபிள் என்பதாகும். இந்த மூன்று நிறுவனங்கள் பெயரிலும் பல கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

அன்னபூர்ணா கன்வெர்டிபிள் லிமிட்டெட் நிறுவனத்தின் பெயரில் மட்டும் ரூ. 259 கோடி பணத்தை குவித்துள்ளனர். லீவரேஜ் பெயரில் ரூ. 84 கோடியும், அன்னபூர்ணா கன்வெர்டிபிள் நிறுவனப் பெயரில் ரூ. 45 கோடியும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களின் உரிமையாளராகவும், கணக்குகளைப் பராமரிப்பவராகவும், ஒரே நிறுவனத்தின் பெயர்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அது, பி்ஸ்ச் அஸட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பியஸ் பிஸ்ச்.

இந்த அன்னபூர்ணா நிறுவனங்கள் யாருடையவை, யார் இதன் பினாமி, எந்த அரசியல் பிரமுகர் அல்லது தொழிலதிபரின் நிறுவனங்கள் இவை என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக  அரசு இதை விசாரித்தால் மிகப் பெரிய தகவல்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது. 


தமிழர்கள் இத்தனை பேர்தான் இப்பட்டியலில் உள்ளனரா, அல்லது வேறு பலரும் உள்ளனரா என்பது தெரியவில்லை. விக்கிலீக்ஸ் இந்தப் பட்டியலை முழுமையாக வெளியிடும்போது அதுகுறித்துத் தெரிய வரலாம்.

Monday, January 17, 2011

சிறுத்தை: சினிமா விமர்சனம்

பையா படத்தில் நாம் பார்த்த பையனா இது என்று வியக்கும் அளவுக்கு சிறுத்தையில், டிஸ்பி மற்றும் திருடன் என இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தியுள்ளார் கார்த்தி.

ஆந்திர மாவட்டம் தேவிபட்டினத்தை ஒரு ரவுடிக் குடும்பம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. யாராவது வந்து நம்மை காப்பாற்ற மாட்டார்களா என்று மக்கள் ஏங்கும்போது மீசையை முறுக்கிக் கொண்டு, அழகிய பெண் குழந்தையோடு வந்து இறங்குகிறார் ரத்னவேல் பாண்டியன் (டிஎஸ்பி கார்த்தி). ரவுடிக் குடும்பத்தை கதிகலங்க வைத்து மக்கள் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வருகிறார். ஆனால் வில்லன் தாக்குதலில் படுகாயம் அடையும் டிஎஸ்பி சென்னைக்கு சிகிச்சைக்காக வருகிறார். 

சென்னையைக் கலக்கும் 'அஜக் மஜக்' திருடன் ராக்கெட் ராஜா (2வது கார்த்தி). காட்டு பூச்சியுடன் (சந்தானம்) சேர்ந்து திருடித் திருடி ஜாலியாக இருக்கிறார். இந்த இடத்தில் ஹீரோயினை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள். சென்னையில் இரண்டு கார்த்திகளும் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது சரியான கலாட்டா, அதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

கார்த்தி முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் சிறுத்தை. டிஎஸ்பி ரத்னவேல் பாண்டியன் கதாபாத்திரம் கம்பீரமாக இருந்தது. இப்படி ஒரு போலீஸ் நம்ம ஊருக்கு வரமாட்டாரா என்று நினைக்கும் அளவுக்கு கம்பீரம்.

ரத்தினவேல் பாண்டியனாக மாறி வரும்போது கார்த்தி நடக்கும் நடை ரஜினிகாந்த் மூன்று முகத்தில் நகத்தைக் கடித்துக் கொண்டு நடப்பதை நினைவூட்டியது. 

ரத்னவேல் பாண்டியன் கிடுகிடு என்றால் ராக்கெட் ராஜா சடுகுடு. அந்தத் திருடன் கதாபாத்திரத்தில் கார்த்தி திரையரங்கையே குலுங்க குலுங்கச் சிரிக்க வைத்துள்ளார்.

ராக்கெட் ராஜாவுடன் காட்டுப்பூச்சி என்ற பெயரில் சந்தானம் செய்யும் காமெடி அதகளம். 

முந்தைய படங்களில் டான்ஸில் சொதப்பிய கார்த்தி, இப்படத்தில் டபுள் புரமோஷன் வாங்குகிறார்.

தமன்னாவுக்கு நடிப்பதை விட அழகைக் காட்டி விட்டுச் செல்லத்தான் நிறைய வாய்ப்பு, சொன்னதை செய்திருக்கிறார். இசை பிரமாதம் என்று சொல்ல முடியாது. ராக்கெட் ராஜா பாடல் பரவாயில்லை.

ஆக்ஷன் படமாக இருந்தாலும் படத்தில் கார்த்திக்கு பன்ச் டயலாக் இல்லை. இதற்காகவே டைரக்டரை ஒருமுறை வாயார பாராட்டலாம். 

'சிங்கம்' சூர்யாவுக்கு, சவால் இந்த 'சிறுத்தை' கார்த்தி. 

Saturday, January 15, 2011

காவலன்: சினிமா விமர்சனம்

காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் ஒன்லைன் தான் காவலன் கதையும்,
ஆனால் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.

தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி 
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே 
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான்.
கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன்
கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை 
வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு 
விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.


வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத 
வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற
விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில்
அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால்  முக்கிய இடத்தில் 
அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம்
பொங்கல் வைக்கிறார்.

அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.
அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ்  செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)

அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )

படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.

டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ்
பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய் 
இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு
 டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை
ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)

அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு  அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின்  தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல்  மறைத்து விடுகிறது.



கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.

இந்தக்கதையில் ஆக்‌ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள். 

இந்தப்படத்தில் விஜய்க்குப்பஞ்ச் டயலாக்ஸே இல்லை.குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கம் காமெடி ஃபிலிம்.

Sunday, January 9, 2011

பலான ரோலில் சிம்பு அனுஷ்கா

தென்னிந்திய திரை நாயகியரில் 'உயர நாயகி' பெயரெடுத்த அனுஷ்கா, முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

'சின்ன வயதிலிருந்து' தமிழ் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன்.

என் நடிப்பை ஸ்கிரீனில் ரசிக்கிறவர்கள் என்னை நிச்சயம் பாராட்டுவார்கள் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.அழகான கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்.சில நேரங்களில் பரபரப்பான ரோலிலும் நடிக்க வேண்டியதாகிவிடும்.
கொடுத்த ரோலில் ஒரு நடிகையாக நடிப்பை காட்டி அசத்த வேண்டும் என்றே விரும்புகிறேன் என்கிறார்.
வானம் படத்தில் துடிப்பான யூத் கேரக்டரில் சிம்பு, பலான ரோலில் அனுஷ்கா, இருவரும் நடித்துள்ளார்கள்.
ஹைதராபாத் படப்பிடிப்பில் சிம்பு-அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்ததை பார்த்து வானம் படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் பார்த்து சிலிர்த்து போனாராம்.
குறிப்பிட்ட 'போர்ஷன்' சிறப்பாக வர குஷியானாராம். இந்த காட்சிகள் நிச்சயம் ரசிகர் நெஞ்சங்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை என்றாராம்.
கவிஞர் சிலம்பரசனாக வானம் படத்துக்காக சிம்பு எழுதிய  'எவன்டி உன்னை பெத்தான்'.....எனத்தொடங்கும் கருத்தாழமிக்க பாடல் ரசிகர்களை உருகி கரைய வைக்குமாம்.

Tuesday, January 4, 2011

தமிழ் சினிமாவின் தறுதலை ஹீரோக்கள்...!

வேலையில்லாத வயிற்றெரிச்சலில் பதிவெழுத உட்கார்ந்தால் இதுபோன்ற பதிவையெல்லாம் எழுதத் தோன்றுகிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ஹீரோ கதாப்பாத்திரமே எனது இந்த சமூகக்கோபத்திற்கு காரணம். இப்பொழுதெல்லாம் தமிழ் சினிமாக்களில் ஹீரோவிற்கு இரண்டே விதமான கேரக்டர்கள் தான். ஒன்று, சிட்டியில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிவரும் கேரக்டர். இன்னொன்று, கிராமம்களில் சண்டித்தனம் பண்ணிக்கொண்டு திரியும் கேரக்டர். இதற்கெல்லாம் விதிவிலக்காக அவ்வப்போது சில நல்ல திரைப்படங்களும் வருகிறது. ஆனால் நம் தமிழ் சினிமா ரசிகர்கள் அன்னப்பறவையை போன்ற மேன்மையான குணம் கொண்டவர்கள். சினிமாவில் இருந்து கெட்ட விஷயங்களை மட்டும் உறுஞ்சி எடுத்துக்கொண்டு நல்ல விஷயங்களை எல்லாம் தூக்கி கடாசிவிடுவார்கள்.

பொதுவாக ஹீரோவின் பாத்திர படைப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம் :-
·          ஹீரோ ரொம்ப அசால்ட். யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.
·          ஹீரோவின் அப்பா எப்போதும் ஹீரோவை திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் ஹீரோ அவரையும் மதிக்காமல் வெறுப்பேற்றும் விதமாகவே செயல்படுவார்.
·          ஹீரோவின் அம்மா ரொம்ப பாசக்கார அம்மா கூடவே கொஞ்சம் லூசாகவும் இருப்பார். அப்பா கேரக்டர் ஹீரோவை அசிங்க அசிங்கமாக திட்டிக்கொண்டிருக்கும்போது சலனமே இல்லாமல் இடையில் புகுந்து ஹீரோவிற்கு ஹார்லிக்ஸ் கொடுப்பார்.
·          ஹீரோவிற்கு தங்கை, தம்பி, அண்ணன், அக்கா, அண்ணி போன்ற கேரக்டர்கள் அவ்வப்போது காமெடிக்காகவும் பொழுதுப்போக்கவும் வந்துசெல்வார்கள்.
·          ஹீரோவை யாராவது இரும்புக்கம்பியால் இருபது முறை பின்மண்டையில் அடித்தால் கூட ஹீரோ எழுந்து வந்து வில்லன் கும்பலை புரட்டி எடுத்து புரோட்டா போடுவார்.

·          இரண்டரை மணிநேர படத்தில் கடைசி அரைமணிநேரம் இருக்கும்போது எப்படியோ ஹீரோவிற்கு பொறுப்பு வந்து ஒரே பாடலில் பணக்காரன் ஆகிவிடுவார்.


மேற்கூறிய கேரக்டரை சில ஆண்டுகளுக்கு முன்பு மருமகப்புள்ளை தனுஷ் குத்தகைக்கு எடுத்திருந்தார். அவரது படங்கள் அனைத்திலுமே அப்பா மகனை சகட்டுமேனிக்கு திட்டுவதும் மகன் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் அதைக்கேட்டு பல்லிளிப்பது போன்ற காட்சியொன்று நிச்சயம் இடம்பெறும். தற்போது சிலகாலமாக சிவக்குமாரின் தவப்புதல்வரும் சூர்யாவின் தம்பியாண்டானும் ஆகிய கார்த்தி இந்த கேரக்டரை கவ்வியிருக்கிறார். மேலும் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலும் ஹீரோவிற்கு இப்படியொரு மானங்கெட்ட கேரக்டர் தான். பாஸ் இயக்குனர் இதற்குமுன்பு எடுத்த சிவா மனசுல சக்தி படத்திற்கும் இதே அக்கப்போர் தான். ஹீரோ கேரக்டர் இப்படியென்றால் ஹீரோயின் கேரக்டர் அதற்கும் மேல. தேடிக்கண்டுபிடித்து வெட்டிப்பயலை தான் லவ்வுவார்களாம்.


பையா படத்தில் தமன்னாவும் கார்த்தியும் கட்டிப்பிடித்துக்கொள்வதோடு படம் நிறைவு பெறும். அதன்பிறகு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமன்னாவுடன் பன்னாடைப்பயல் கார்த்தி எப்படி குடும்பம் நடத்தினான் என்பதை யாரும் காட்டமாட்டார்கள் நாமும் யோசிக்க மாட்டோம். பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் முதல்பாதியில் ஹீரோ ஒரே பாடலில் பணக்காரன் ஆவதை ஒரு காட்சியில் கிண்டலடித்து இருப்பார்கள். ஆனால் இரண்டாம் பாதியில் அங்கேயும் அதே கதைதான். கொஞ்சம் கூட படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்கள் ஒரே பாடலில் மனம்திருந்தி படித்து பாசாகிவிடுவார்கள் படம் பார்ப்பவர்களை லூசாக்கிவிடுவார்கள்.

இத்தகைய செயல்களுக்கெல்லாம் திரைத்துறையினரை மட்டும் குறை சொல்லமுடியாது. குடும்பத்தோடு சினிமா பார்த்தவர்கள் எல்லாம் தற்போது மலிவு விலை தகடுகளில் முடங்கிவிட திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முன் இருக்கையில் கால்களை போட்டுக்கொண்டு பான்பராக்கை வாயில் குதப்பிக்கொண்டு திரியும் சைனா மொபைல் கும்பல்தான். இவர்களால் தான் நல்ல படங்களெல்லாம் வந்த வேகத்தில் திரும்பிவிடுகின்றன. மிஷ்கினின் நந்தலாலா இதுவரை ரிலீஸ் ஆகாதது கூட இதுபோன்ற கலரிங் ம(ண்)டையர்களால்தான்.

யார் என்ன சொன்னாலும் தமிழ் சினிமா திருந்தப் போவதில்லை. இனி திருந்த வேண்டியது நாம் தான். இனியாவது வெட்டி ஆபிசர் ஹீரோக்களை ரசிப்பதை நிறுத்திவிட்டு போய் அவங்கவங்க புள்ளக்குட்டிங்களை படிக்க வைப்போம்.

Sunday, January 2, 2011

அசின் படுக்கையறை காட்சிகள்…இந்த அளவு போதுமா


 இந்தி மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அதிரடி கவர்ச்சி ப் புரட்சியில் இறங்கியுள்ளாராம் அசின்.
இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன் ரெடி படத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துள்ளாராம். படம் வெளியாவதற்கு முன்பு இந்தக் காட்சிகளை வெளியிட்டு, மார்க்கெட்டில் புதிய வாய்ப்புகளை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக மும்பை பத்திரிகைகள் கிசுகிசுக்கின்றன.
வாய்ப்புக் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால் கவர்ச்சி ஆயுதத்தை முழுசாகப் பிரயோகிப்பது நடிகைகள் வழக்கம். அசினும் இதற்கு விலக்கில்லை.
கஜினி மூலம் இந்திக்கு போன முதல் படத்திலேயே இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். அது படு தோல்வி அடைந்தது. இதனால் பட வாய்ப்புகள் குறைந்தது. ஆரம்பத்தில் கஜினி வெற்றி தந்த மிதப்பில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்களிடம் ஏற்கனவே கண்டிஷன் போட்டிருந்தார்.
ஆனால் இந்த கண்டிஷனுக்கு இப்போது வேலையில்லாமல் போய்விட்டது.
இந்தி கதாநாயகிகள் அனைவரும் நீச்சல் உடை வரை தாராள கவர்ச்சி காட்டுவதால் வாய்ப்புகளை தக்க வைக்க அசினும் தற்போது பிடிவாதத்தை தளர்த்தியுள்ளார்.
சல்மான் கானுடன் தற்போது நடித்து வரும் ரெடி படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டியுள்ளாராம். நெருக்கமாக படுக்கையறை காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.
விரைவில் இந்தக் காட்சிகள் தொடர்பான படங்களை வெளியிட உள்ளாராம் அசின். இதன் பிறகு இந்தியில் தனது ரேஞ்சே வேறு என்றும் அவர் கூறி வருகிறாராம்!