Sunday, May 29, 2011

இஸ்லாம் தீவிரவாததிற்கு எதிரான சமயம்...(poda dubuku)

ஒசாமாவுக்காக  சென்னையில் ஜனாசா( இறுதி சடங்கு)தொழுகை நடந்துள்ளது...தமிழ்நாட்டில் மாற்று மதத்தினரும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும்நேரத்தில இந்த சம்பவம் முஸ்லிம்களிடையே ஒருவித தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது ......

ஒசாமா ஒரு தீவிரவாதி,உலகமே பயந்த பயங்கரவாதி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.....
நமது உறவினர்களில், நமது நண்பர்களில் யாரேனும் ஒசாமா நடத்திய குண்டு வெடிப்பு, இரட்டை கோபுர தாக்குதல்களில் உயிர் இழந்து இருந்தால் இழப்பின் வலி நமக்கு தெரிந்து இருக்கும்....

ஒசாமாவுக்கு எதிரி அமெரிக்கா என்றால் உயிர் இழந்த மக்கள் அமெரிக்காவில் பிறந்ததுதான் அவர்களின் தவறா?இஸ்லாம் ஒருபோதும் அடுத்த மதத்தினர் மீது தாக்குதல் நடத்த சொன்னதில்லை...அப்பாவி மக்களை கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் ஏற்று கொள்வதில்லை.....அப்படி இருக்கையில் ஆயிர கணக்கான உயிர்களை பலிகொண்ட ஒசாமா அமெரிக்காவை எதிர்த்ததால் மட்டும் நல்லவராகிவிட முடியுமா?

ஒசாமாவின் அமெரிக்க எதிர்ப்பை நானும் ஆதரிக்கிறேன்....ஆனால் அப்பாவி மக்களை கொன்ற ஒசாமாவை எதிர்க்கிறேன்....அவரின் உடலை இறுதி தொழுகை நடத்தாமல் கடலில் வீசிய அமெரிக்காவின் செயல் கண்டனத்துக்கு உரியதே ....ஆனால் அதற்காக எல்லா மதத்தினரும் சகிப்புத்தன்மையோடும், ஒற்றுமையோடும் வாழும் தமிழ்நாட்டில் ஒசாமாவுக்காக நடத்தப்பட்ட தொழுகை தேவையற்ற ஒன்றே .....தவிர்க்க பட வேண்டிய ஒன்றே.....கண்டனத்துக்கு உரிய ஒன்றே....

No comments:

Post a Comment