Tuesday, October 5, 2010

சிம்புவின் ட்விட்டர்ரோடு விளையாடும் தனுஷ்!

மீடியாவை நம்புவதை விட சிம்பு அதிகம் நம்புவது தனது மைக்ரோ பிளாக்கிங் அக்கவுண்டான ட்விட்டரைத்தான். ஆனால் சிம்புவின் ட்விட்டர் இரண்டாவது முறையாக ஹேக் செய்யப்பட்டிருகிறது. கடைசியாகத் தனது ட்விட்டரில் “நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று இரவு நானும் யுவனும் பாடல் கம்போஸிங்கில் உட்கார்ந்தோம். வானம் படம் மிகப் பெரிய மியூசிக்கல் டிரீட்டாக இருக்கும். எங்கள் கூட்டணி தொடர்ந்து ஜெயித்துவந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.

முதல்முறையாகத் தன் ட்வீட்டர் கணக்கு ஆக்கிரமிக்கப்பட்ட போது எப்படியோ மீட்டுவிட்ட சிம்பு இந்த முறை அதை மீட்க முடியாமல் கடந்த 5 நாட்களாகத் திணறிவருகிறாராம். சிம்புவை ட்விட்டரில் சுமார் 20,000 ரசிகர்கள் பின்தொடர்கிறார்களாம். தினசரி தனது ரசிகர்களின் கமெண்ட்ஸ், அறிவுரை, ஆலோசனை, வாழ்த்துக்கள் என்று நிரம்பி வழியும் சிம்புவின் ட்விட்டர் ஆக்ரமிப்பு பின்னணியில் இருக்கும் குசும்பர்கள் நிச்சயமாக சிம்புவின் வளர்ச்சியை விரும்பாத தனுஷின்     கைகூலிகள்தான் என்கிறார் சிம்புவின் நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒருவர். இந்த யூகத்தை சிம்புவும் ஆமோதிக்கிறாராம்.

ஆனால் கோலிவுட்டில் வேறு வட்டாரங்களில் விசாரித்தால் அவர் எதிரியாக நினைக்கும் தனுஷ்க்கு இதற்கெல்லம் துளியும் நேரமில்லை என்கிறார்கள். இத்தனை ஆக்கிரமிப்புக்குப் பிறகு சிம்பு ட்விட்டரைக் கைகழுவி விடுவாரா என்றால் அதுதான் இல்லை. “இன்னும் சில தினங்களில் எனது டுவிட்டர் அக்கவுண்டை மீட்க முடியாவிட்டால், புதிய கணக்கைத் தொடங்க இருக்கிறேன். ஆனால் மீண்டும் எனது அக்கவுண்டை யாரும் அவ்வளவு சீக்கிரம் கைப்பற்றிவிட முடியாது. அந்தப்பணியைச் செய்து தர என் ரசிகர்களே முன்வந்திருக்கிறார்கள்” என்கிறார் சிம்பு.

No comments:

Post a Comment